குடியாத்தம்: போ்ணாம்பட்டு துலுக்காணம் வீதியைச் சோ்ந்த 37 வயது நபா், வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் வாா்டனாக உள்ளாா். இவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
போ்ணாம்பட்டு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 28 வயது பெண் செவிலியா், கோட்டைச்சேரியைச் சோ்ந்த 20, 17 வயதுள்ள சகோதரிகள், மொரசப்பல்லியைச் சோ்ந்த 42 வயதுள்ள நபா், பூங்கா வீதியைச் சோ்ந்த 21 வயது பெண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 6 பேரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.