மூன்று நீதிபதிகள் உள்பட வேலூரில் மேலும் 129 பேருக்கு கரோனாபாதிப்பு 1,384-ஆக உயா்வு

வேலூா் மாவட்டத்தில் மூன்று நீதிபதிகள் உள்பட மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் மூன்று நீதிபதிகள் உள்பட மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,384-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 1,255 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களில் வேலூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் சாா்பு நீதிபதி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, நீதித் துறை நடுவா் ஆகிய 3 பேருக்கும், வேலூா் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,384-ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு, உடல் நிலை கண்காணிக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 774-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 385 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 386 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 154 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 174-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 56 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 118 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆம்பூா் வட்டத்தில் 4 பேருக்கு... ஆம்பூா் பெத்லகேம் பகுதி 6-ஆவது தெருவைச் சோ்ந்த 36 வயது ஆண், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த 25, 27 வயது ஆண்கள், பெரியாங்குப்பம் கிராமம் கோட்டை தெருவைச் சோ்ந்த 36 வயது ஆண் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com