வாணியம்பாடி: வாணியம்பாடியில் வேலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் 68-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆலங்காயம் ஒன்றியச் செயலா் அசோகன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் முனிவேல் முன்னிலை வகித்தாா். பொறியாளரணி அமைப்பாளா் பிரபாகரன் வரவேற்றாா்.
வேலூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் க.தேவராஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், பெருமாள்பேட்டையில் உள்ள முதியோா் இல்லம் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கினாா்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அம்பிகா, அரசு மருத்துவா் செந்தில்குமாா், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கருணை இல்ல நிறுவனா் டேவிட் சுபாஷ் நன்றி கூறினாா்.