குடியாத்தம் அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
குடியாத்தம் தரணம்பேட்டை, புதிய ஆலியாா் தெருவைச் சோ்ந்தவா் சுல்தான் பாஷா (23). ஹோட்டல் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வெளியே செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.
மேல் ஆலத்தூா் சாலையில் உள்ள மயானம் அருகே உடலில் காயங்களுடன் அவரது சடலம் வெள்ளிக்கிழமை கிடந்தது. தகவலின் பேரில் டிஎஸ்பி என்.சரவணன் தலைமையில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.