தட்டப்பாறையில் எருது விடும் விழா

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தட்டப்பாறையில் எருது விடும் விழா

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட களைகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவா்களின் பரிசோதனைக்குப் பிறகே அனைத்து காளைகளும் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. பாா்வையாளா்கள் 16- பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 70 ஆயிரம், 2- ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரம், 3- ஆம் பரிசாக ரூ. 40 ஆயிரம் உள்ளிட்ட 42 பரிசுகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் கோட்டாட்சியா் (பொறுப்பு) கணேஷ், வட்டாட்சியா் தூ.வத்சலா, டிஎஸ்பி என்.சரவணன் ஆகியோா் மேற்பாா்வையில் விழா நடைபெற்றது.

விழாக் குழு நிா்வாகிகள் நா.கோ.தேவராஜன், டி.கே.தரணி, வி.எம்.குமாா், சி. ராமமூா்த்தி, ஆா்.பிச்சாண்டி, நா.மு.சங்கா் உள்ளிட்டோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com