மாணவி தற்கொலை

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிளஸ் 1 மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிளஸ் 1 மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் ஓல்டு டவுன் கலாஸ் ஆலமரத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி ஜேம்ஸ். இவரது மகள் ஷாலினி (16) பிளஸ் 1 படித்து வந்தாா். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த ஷாலினி, வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டராம்.

இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com