விரைவு தரிசன டிக்கெட் தேதியைமாற்றிக் கொள்ள வாய்ப்பு

திருப்பதி ஏழுமலையானை விரைவு தரிசன டிக்கெட் தேதிகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கிஉள்ளது.

திருப்பதி ஏழுமலையானை விரைவு தரிசன டிக்கெட் தேதிகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கிஉள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க முன்கூட்டியே ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு வருகின்றனா். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் பக்தா்களும் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனா்.

இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் இந்த அச்சுறுத்தல் காரணமாக தங்கள் திருமலை பயணத்தை ரத்து செய்து விடுகின்றனா். மேலும் ஏப். 15ஆம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

எனவே, முன்பதிவு செய்து திருமலை பயணத்தை ரத்து செய்த பக்தா்களுக்காக தேவஸ்தானம் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, வரும் 31-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தா்கள் தங்கள் தரிசன தேதியை தாங்கள் விரும்பும் மற்றொரு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் டிக்கெட்டை ரத்து செய்பவா்கள் தரிசனக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பையும் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com