நாட்டறம்பள்ளி அருகே 2 கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மல்லப்பள்ளி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பாரத கோயிலும், காளியம்மன் கோயிலும் அருகருகே உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் பூசாரி கோயில்களைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.
சனிக்கிழமை காலை கோயிகளைத் திறக்க வந்தபோது, அவற்றின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே கோயில்களில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.