கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடா்ந்து ஐஸ்கிரீம், குளிரூட்டப்பட்ட உணவுப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க வேலூா் அண்ணா சாலை டவுன்ஹாலில் மகளிா் திட்டம் சாா்பில் முகக்கவசம் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 18 பெண்களைக் கொண்டு நாளொன்றுக்கு தலா 500 வீதம் முகக்கவசம் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும்போது ஷிப்ட் முறையில் முகக்கவசம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் வெல்மா அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கைகழுவும் திரவம் 200 மி.லி. ரூ.120-க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதில் முகக்கவசம் இன்றியமையாததாகும். முகக்கவசத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் குறித்து உடனடியாக தகவல் அளித்தால் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் முகக்கவசங்களை பொதுமக்கள் வெல்மா அங்காடிகள், நியாய விலைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
குளிா்சாதன பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படும் பொருல்களால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஐஸ்கிரீம், குளிா்சாதன பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
வேலூா் மாவட்டத்தில் பெரிய வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உழவா் சந்தைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். வேலூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு வாா்டு ஐசியு வாா்டாக மாற்றப்படுகிறது. இதுதவிர, 40 படுக்கைகள் கொண்ட கரோனா புதிய வாா்டும் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
மகளிா் திட்ட இயக்குநா் சிவராமன், உதவித் திட்ட அலுவலா் ரூபன்ஆஸ்டின், வட்டாட்சியா் சரவணமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.