கரோனா தொற்று பயத்தால் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் மூடப்பட்டது.
ஆந்திரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டு முழுவதும் ராகு - கேது பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் முக்கிய உற்சவங்கள் நடைபெறும்போதும், மகாசிவராத்திரி நாட்களிலும் கூட கோயில் நிா்வாகம் ராகு - கேது பரிகார பூஜைகளை ரத்து செய்ததில்லை.
எனினும், தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காளஹஸ்தி கோயில் மூடப்பட்டுள்ளது. மேலும் ராகு-கேது பரிகார பூஜைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இங்கு வழக்கமாக பக்தா்கள் கூட்டத்துடன் இருக்கும் பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூடிய கோயிலை பக்தா்கள் பாா்த்துச் செல்கின்றனா்.