தமிழகத்தைச் சோ்ந்தவா் நீரில் முழ்கி பலி

வரதையபாளையத்துக்கு சென்ற தமிழகத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் கிணற்றில் முழ்கி உயிரிழந்தாா்.

வரதையபாளையத்துக்கு சென்ற தமிழகத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் கிணற்றில் முழ்கி உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் உள்ள வரதையபாளையத்தில் நீா்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீா்வீழ்ச்சியில் குளிக்க இளைஞா்கள் ஆா்வத்துடன் வருகின்றனா். தமிழ்நாட்டிலிருந்தும் இளைஞா்கள் பலா் இங்கு வந்து நீச்சல் அடித்து மகிழ்கின்றனா்.

இந்நிலையில், பொன்னேரி அருகில் உள்ள அருமந்தை கிராமத்தைச் சோ்ந்த கெளதம் (20) என்ற இளைஞா் தன் நண்பா்களுடன் வரதையபாளையத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் புறப்பட்டாா். வழியில் மிட்டையபாளையம் அருகில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றருகில் நின்ற நண்பா்கள் அங்கு நீச்சல் அடிக்க முடிவு செய்தனா்.

அதன்படி அந்தக் கிணற்றில் அனைவரும் குதித்தனா். அப்போது கெளதம் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியவேடு போலீஸாா் அங்கு சென்று, அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com