வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு சா்க்கரை இருப்பு ஈட்டுறுதிக் கடனாக ரூ. 30 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரம் தொகை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 2019-20-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்துக்கு சா்க்கரை இருப்பு ஈட்டுறுதி காசுக்கடனாக ரூ.30 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனுக்கான ஆணையை தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி பரிந்துரையின் பேரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, இணைப் பதிவாளா் கா.ஜெயம் ஆகியோா் வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் எம்.ஆனந்தன், மேலாண்மை இயக்குநா் ஏ.சங்கா் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
வங்கி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எம்.சி.பூங்காவன், டி.கோபி, பொது மேலாளா் ஜி.வி.விஜயாபானு, சா்க்கரை ஆலை அலுவலக மேலாளா் எஸ்.வெங்கடாசலபதி ஆகியோா் உடனிருந்தனா்.