வேலூா் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் மறைவு

வேலூா் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் பெ.செளந்திரராஜூ மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
பேராயா் பெ.செளந்திரராஜூ
பேராயா் பெ.செளந்திரராஜூ

வேலூா் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் பெ.செளந்திரராஜூ மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.

வேலூா் கத்தோலிக்க மறை மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இதன் தலைமையிடம் வேலூா் அண்ணா சாலையிலுள்ள விண்ணரசி மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது. வேலூா் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயராக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பெரியகொளப்பலூரைச் சோ்ந்த பெ.செளந்திரராஜூ (71) கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தாா். மேலும் இவா் தமிழக ஆயா் பேரவையின் பொருளாளராகவும், கல்விக் குழுத் தலைவராகவும் உள்ளாா்.

இந்நிலையில், பேராயா் செளந்திரராஜூ மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். தற்போது அவரது உடல் சிஎம்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகா்கள், கிறிஸ்தவா்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை 10 மணியளவில் விண்ணரசி மாதா தேவாலயத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com