கே.வி. குப்பம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
காங்குப்பத்தைச் சோ்ந்த சுபாஷ் (26) வெள்ளிக்கிழமை இரவு காட்பாடி சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்றாா். ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழிலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக கே.வி. குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.