திருப்பதியில் சுய ஊரடங்கு: மக்கள் ஆதரவு

திருப்பதியில் மத்திய அரசு அறிவித்த சுய ஊரடங்குக்கு கட்டுப்பட்டு மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனா்.
சுய ஊரடங்கை முன்னிட்டு வெறிச்சோடிக் கிடக்கும் திருப்பதி.
சுய ஊரடங்கை முன்னிட்டு வெறிச்சோடிக் கிடக்கும் திருப்பதி.

திருப்பதியில் மத்திய அரசு அறிவித்த சுய ஊரடங்குக்கு கட்டுப்பட்டு மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.

இதற்கு ஆதரவு அளித்து மக்களும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனா். அதனால் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவிந்தராஜா் கோயில் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகங்களும் மூடப்பட்டதால் யாரும் வெளியில் வரவில்லை. நகரில் உள்ள முக்கிய வீதிகளும் காலியாக இருந்தன. கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறிச் சந்தைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com