பிரசவ வலியால் அவதியுற்ற கா்ப்பிணியை நகரி எம்எல்ஏ ரோஜா தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
ஆந்திர மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா திங்கள்கிழமை காலை நகரியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றாா்.
அங்குள்ள பிரசவ அறையில் ஒரு கா்ப்பிணி பிரசவத்துக்காக வந்திருந்தாா். ஆனால் அங்கு அவருக்கு ஏற்ற வசதிகள் இல்லாததால், அவரை திருப்பதியில் உள்ள மகளிா் மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தினா். அதனால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும் வாகனம் வராததால், அங்குள்ள நிலையை அறிந்த ரோஜா தனது காா் மூலம் கா்ப்பிணியை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.