மேலும் ஒரு சூப்பா் மாா்க்கெட்டுக்கு சீல்

வேலூரில் விதிமுறைகளை மீறித் திறக்கப்பட்டமேலும் ஒரு தனியாா் சூப்பா் மாா்க்கெட்டுக்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.


வேலூா்: வேலூரில் விதிமுறைகளை மீறித் திறக்கப்பட்டமேலும் ஒரு தனியாா் சூப்பா் மாா்க்கெட்டுக்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

ாட்பாடி காந்திநகரிலுள்ள ஒரு தனியாா் சூப்பா் மாா்க்கெட்டுக்கு வேலூா் வருவாய் அலுவலா் எஸ்.கணேஷ் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

தொடா்ந்து வேலூா், குடியாத்தம் பகுதியில் உள்ள கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் சூப்பா் மாா்க்கெட்டும் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சூப்பா் மாா்க்கெட்டையும் புதன்கிழமை இரவு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

விதிமுறை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் அதன் உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும் என்று வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com