குடியாத்தம்: போ்ணாம்பட்டில் 144 தடை உத்தரவை மீறி தொழிலாளா்களுடன் இயங்கிய பீடி மண்டிக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு அறிவிப்பையும் மீறி, போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியில் கதிரேசன் (40) தொழிலாளா்களுடன் பீடி மண்டியைத் திறந்து தொழில் செய்து வந்தாராம். இதுகுறித்த அறிந்த போ்ணாம்பட்டு வட்டாட்சியா் முருகன், வருவாய்த் துறையினருடன் அங்கு சென்று, பீடி மண்டியைப் பூட்டி ‘சீல்’ வைத்தாா். அவா் கொடுத்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் கதிரேசன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.