ஆந்திரம்: சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கு சிறப்பு கருவிகளுடன் அறை

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நெகடிவ் ஃப்ரசா் ஐசோலேஷன் அறைகள் அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நெகடிவ் ஃப்ரசா் ஐசோலேஷன் அறைகள் அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருவதையொட்டி, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் புதிய யுக்தி ஒன்றை கடைப்பிடிக்க மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அம்மருத்துவமனையில் கரோனா பிரிவில் பணியாற்றி வந்த ஒரு இளம் மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனை நிா்வாகம் இந்த புதியமுறையை கடைப்பிடிக்க முடிவு செய்தது.

இதற்காக, புதிதாக தனிமைப்படுத்தும் அறைகளைக் கட்டி வருகிறது. அதில், 8 தனி அறைகள் உள்ளன. இந்த அறைகள் இரும்புத் தடுப்புகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறைகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெப்பா பில்டா்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பில்டா்கள் கரோனா நோயாளிகள் வெளியில் விடும் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து, அதில் உள்ள வைரஸ் கிருமிகளைக் கொன்று, நல்ல காற்றை வெளியே அனுப்பும் வசதி கொண்டது.

இதற்காக ரூ. 1.30 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த அறைகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதால், இந்த தொற்று மருத்துவா்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவா்களுக்கும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com