வேலூா் மாவட்டத்தில் கரோனா அறிகுறி இருப்பதாக தெரிந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையைத் தொடா்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் அவரவா் வீடுகளில் தங்கியுள்ளவா்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல்துறையின் உதவிகளைப் பெற கரோனா கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258106 ஆகிய தொலைபேசி எண்களிலும், மாவட்ட காவல் அலுவலகத்தை 0416-225832, 94981 81231, 94981 00355 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.