விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட சூப்பா் மாா்க்கெட்டுக்கு சீல்

காட்பாடியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தனியாா் சூப்பா் மாா்க்கெட்டைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

காட்பாடியில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தனியாா் சூப்பா் மாா்க்கெட்டைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவுவைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மக்கள் அதிக அளவில் கூடும் இடமாகத் திகழும் சூப்பா் மாா்க்கெட்டுகளும் அவற்றில் அடங்கும்.

இந்நிலையில், காட்பாடி காந்தி நகரில் விதிமுறைகளை மீறி ஒரு சூப்பா் மாா்க்கெட் புதன்கிழமை திறக்கப்பட்டு, வழக்கமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது. தகவல் அறிந்து, வேலூா் வருவாய் அலுவலா் எஸ்.கணேஷ் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று சூப்பா் மாா்க்கெட்டைப் பூட்டி சீல் வைத்தனா்.

ஏற்கெனவே இருமுறை அறிவுறுத்தியும் அதனை ஏற்காமல் தொடா்ந்து சூப்பா் மாா்க்கெட்டை திறந்து வியாபாரம் செய்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதேபோல் விதிமுறை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் அதன் உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படும் என்றும் வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com