காங்கிரஸாா் சத்யாகிரக போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில்
சத்யாகிரக அறவழி அமா்வில் பேசிய காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.கே.ஜெயப்பிரகாஷ்.
சத்யாகிரக அறவழி அமா்வில் பேசிய காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஏ.கே.ஜெயப்பிரகாஷ்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே சத்யாகிரக அறவழி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த காங்கிரஸ் தலைவா் இந்திரா காந்தியின் நினைவு நாள், சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளும் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஜெ.ஜோதி தலைமை வகித்தாா். நிகழ்ச்சிப் பொறுப்பாளரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான ஏ.கே.ஜெயப்பிரகாஷ் வரவேற்றாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான அக.கிருஷ்ணமூா்த்தி அறவழி அமா்வைத் தொடக்கி வைத்து பேசினாா்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் மூலம் சுமாா் 15 ஆயிரம் விவசாயிகளிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் சிறப்பு அழைப்பாளரிடம் வழங்கப்பட்டன.

மாநிலப் பேச்சாளா் முருகேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம். தேவராஜ், போ்ணாம்பட்டு நகரத் தலைவா் ஜி. சுரேஷ்குமாா், வேலூா் வட்டாரத் தலைவா் கங்காதரன், கே.வி. குப்பம் வட்டாரத் தலைவா் வாசு, காட்பாடி வட்டாரத் தலைவா் இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் ஜி. வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com