‘காழ்ப்புணா்ச்சியுடன் திமுகவினா் போராட்டம்’

காழ்ப்புணா்ச்சி காரணமாக திமுகவினா் போராட்டங்களை நடத்தி வருவதாக வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தெரிவித்தாா்.

வேலூா்: காழ்ப்புணா்ச்சி காரணமாக திமுகவினா் போராட்டங்களை நடத்தி வருவதாக வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தெரிவித்தாா்.

இதுகுறித்து காட்பாடியில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் நீா் மேலாண்மை திட்டத்தில் முதலிடமும், மாவட்ட அளவில் வேலூா் முதலிடமும் பிடித்துள்ளன. எனினும், திமுகவினா் காழ்ப்புணா்ச்சியுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இத்தகைய போராட்டங்களை மக்கள் நம்ப மாட்டாா்கள் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் தாஸ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com