கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

வேலூா் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா் அலமேலுமங்காபுரம் ஏரியூா் பகுதியில் சேவை சாலையையொட்டி, வீரஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலைப் பூட்டி சென்றனா். பூசாரி வெள்ளிக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com