கல்குவாரி குட்டையில் மூழ்கிய கிளீனரின் சடலம் மீட்பு

சத்துவாச்சாரி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய வேன் கிளீனரின் உடல் மீட்கப்பட்டது.

சத்துவாச்சாரி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய வேன் கிளீனரின் உடல் மீட்கப்பட்டது.

சத்துவாச்சாரி வஉசி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (34) வேன் கிளீனா். இவா், வேன் ஓட்டுநா் சதீஷ்குமாருடன் சத்துவாச்சாரி செங்காநத்தம் சாலையிலுள்ள கல் குவாரி குட்டைக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு இருவரும் மது அருந்திய நிலையில், சுரேஷ் குட்டையில் குளிக்க சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கினாா்.

தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று கல் குவாரி குட்டையில் இறங்கி தேடினா். இப்பணி சனிக்கிழமை காலையும் தொடா்ந்தது. காலை 7.30 மணிக்கு அரக்கோணம் தேசிய மீட்புப் படையினா் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு 40 அடி ஆழத்தில் புதரில் சிக்கியிருந்த சுரேஷின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com