காட்பாடியில் கடைகளில் பயன்படுத்திய 20 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

காட்பாடியில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில் அங்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 20 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காட்பாடியில் உள்ள பேக்கரி ஒன்றில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்த வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள்.
காட்பாடியில் உள்ள பேக்கரி ஒன்றில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்த வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள்.

காட்பாடியில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில் அங்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 20 வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வீட்டு உபயோகத்துக்காக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் முறைகேடாக கடைகள், திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.

இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்ட வழங்கல் அலுவலா் பானு தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் காட்பாடி சித்தூா் சாலை, சில்க் மில் பகுதியிலுள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், திருமண மண்டபங்களில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 8 கடைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்த 20 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மதிநகரில் உள்ள தனியாா் காஸ் ஏஜென்சி கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்றும், அப்போது கடைகளில் முறைகேடாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டா்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com