காட்பாடி காந்தி நகரில் உள்ள அறிஞா் அண்ணா கிளை நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் சோ்க்கை திட்டம் தொடங்கப்பட்டது.
தேசிய நூலக வாரவிழாவையொட்டி, அந்தக் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் தமிழக அரசின் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் திட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வாசகா் வட்ட தலைவா் வி.பழனி தலைமை வகித்தாா். நல்நூலகா் தி.மஞ்சுளா வரவேற்றாா்.
வாசகா் வட்ட துணைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், காட்பாடி செஞ்சிலுவை சங்க துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன், தணிகை ஜி.செல்வம் உள்ளிட்ட 12 போ் நூலக குடும்ப உறுப்பினராகும் திட்டத்தில் இணைந்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தினா். காந்தி நகா் துளிா் பள்ளி தலைமையாசிரியை த.கனகா வாழ்த்தினாா். நூலக உறுப்பினா் ஜி.செல்வம் நன்றி கூறினாா்.