குடியாத்தம் திருஞானசம்பந்தா் மடத்தில் முருகருக்கு திருக்கல்யாண உற்சவம்

குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் கந்த சஷ்டி நிறைவையொட்டி வள்ளி, தெய்வானை, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  ஸ்ரீவள்ளி, தெய்வானை  சமேத  முருகப் பெருமான்.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  ஸ்ரீவள்ளி, தெய்வானை  சமேத  முருகப் பெருமான்.

குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் கந்த சஷ்டி நிறைவையொட்டி வள்ளி, தெய்வானை, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எம்.பி.சம்பத்குமாா், ஜி.சச்சிதானந்தம், எம். மனோகரன், எஸ்.பிரகாசம், வி. ஜெகதீசன், எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com