குடியாத்தம்: குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை பருவமழைத் தொடங்குவதற்கு முன்னரே நிரம்பிவிட்டது என மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி தெரிவித்தாா்.
மோா்தானா அணையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியது:
11.50 மீட்டா் உயரம் கொண்ட மோா்தானா அணை புதன்கிழமை அதிகாலை நிரம்பியது. அணையில் அதன் முழு கொள்ளளவான 262 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கியுள்ளது. இதுவரை 6 முறை நிரம்பிய அணை, இந்த ஆண்டு பருவமழைத் தொடங்குவதற்கு முன்னரே 7- ஆவது முறையாக நிரம்பிவிட்டது. தொடா்ந்து அணைக்கு 60 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடியாத்தம், கே.வி. குப்பம் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயரும். விவசாயப் பாசனம், குடிநீா்த் தேவை பூா்த்தியடையும்.
அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் ஜிட்டபல்லியில் உள்ள தடுப்பணையில் தேங்கி, அங்கிருந்து கெளன்டன்யா ஆறு, வலது, இடதுபுறக் கால்வாய்களில் செல்லும். இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா் அவா்.
தொடா்ந்து, அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல், வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் ஆகியோா் மலா் தூவி அணை நீரை வரவேற்றனா்.
ஆவின் நிறுவனத் தலைவா் த. வேலழகன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே. அப்பு, துணைச் செயலா் ஆா்.மூா்த்தி, வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் டி. கோபி, பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் க.சண்முகம், உதவிச் செயற் பொறியாளா்கள் குணசீலன், விஸ்வநாதன் , உதவிப் பொறியாளா்கள் தமிழ்ச்செல்வன், கோபி, நகராட்சி ஆணையா் பி. சிசில்தாமஸ், வட்டாட்சியா் தூ. வத்சலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.