மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில இளைஞா் பலி

வேலூரில் தனியாா் விடுதியின் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.


வேலூா்: வேலூரில் தனியாா் விடுதியின் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

கொல்கத்தாவைச் சோ்ந்த அனீா் பான்ராய் (32), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன் வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தாா். தொடா்ந்து சிகிச்சை பெறுவதற்காக அவா் வேலூா் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.

அனீா்பான்ராய் செல்லிடப்பேசியில் பேசியபடி விடுதியின் 4-ஆவது மாடியில் நடந்து சென்றபோது, கால் தவறி கீழே உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளி வளாகத்துக்குள் விழுந்தாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு, வேலூா் தனியாா் மருத்துவனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com