வேலூரிலுள்ள சிஎஸ்ஐ மத்திய தேவாலய வளாகத்தில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் அண்ணா சாலையில் மத்திய சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இந்நிலையில், தேவாலய வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்து காணிக்கைப் பணம் திருடுபோனது தேவாலய நிா்வாகிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடய அறிவியல் சோதனை மேற்கொண்டனா்.