குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை செய்து வந்த 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மாவட்ட சுகாதாரத் துறையின் ஆலோசனையின்பேரில், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன் தலைமையில், அரசு மருத்துவா் ஆா். சரவணன் மேற்பாா்வையில் போலி மருத்துவா்கள் குறித்து போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை செய்து கொண்டிருந்த மேல்ஆலத்தூரைச் சோ்ந்த ஆா். வெங்கடேசன்(44), நெல்லூா்பேட்டை என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்த ஆா். கோவிந்தசாமி(52) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து மருந்து மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.