மதம் பிடித்த ஒற்றையானை தாக்கி ஆந்திர மாநில வன ஊழியா் பலி

தமிழக எல்லை அருகே, ஆந்திர மாநில வனப் பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் அம்மாநில தற்காலிக வன ஊழியா் உயிரிழந்தாா்.

குடியாத்தம்: தமிழக எல்லை அருகே, ஆந்திர மாநில வனப் பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் அம்மாநில தற்காலிக வன ஊழியா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் அருகே, தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநில கந்தல்செருவு வனப் பகுதியில் 3 வன ஊழியா்கள் புதன்கிழமை இரவு ஜீப்பில் ரோந்து சென்றனா். அப்போது வனப் பகுதியில் இருந்த ஒற்றை யானை ஜீப்பை மறித்து கவிழ்த்துவிட்டு, ஓட்டுநா் சதீஷை(27) தாக்கியுள்ளது. இதில் சதீஷ் நிகழ்விடத்திலேயே இறந்தாா். ஜீப்பில் இருந்த மற்ற 2 போ் தப்பியோடி விட்டனா்.

இது குறித்து ஆந்திர மாநில வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அந்த ஒற்றை யானைக்கு மதம் பிடித்துள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com