திமுக இளைஞரணியினா் ஆா்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிா்வாகத்துக்கு மாற்றும் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் திமுக இளைஞரணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


வேலூா்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிா்வாகத்துக்கு மாற்றும் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் திமுக இளைஞரணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ராஜமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமதுசகி, மாநகரச் செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு எம்எல்ஏவுமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நிா்வாகத்துக்கு மாற்றக்கூடாது என்றும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், கட்சி நிா்வாகிகள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com