போ்ணாம்பட்டு வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா

போ்ணாம்பட்டு வட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
போ்ணாம்பட்டு வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா


குடியாத்தம்: போ்ணாம்பட்டு வட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

செண்டத்தூா், கொத்தூா் ஊராட்சிகளில் தலா ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட 2 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. காா்கூா் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், ரூ. 1.20 கோடியில் நீா்த் தேக்கத் தொட்டி, குடிநீா் இணைப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது. சிவனகிரி கிராமத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ. 14.15 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா்கபீல் ஆகியோா் துணை சுகாதார நிலையங்களைத் திறந்து வைத்து, புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜே.பாா்த்தீபன், கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் தி.மணிவண்ணன், ஆவின் நிறுவனத் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஆா்.மூா்த்தி, ஒன்றியச் செயலா் டி.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com