வேலூா்: பெங்களூருவில் இருந்து சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த பள்ளிகொண்டா போலீஸாா், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வேனுடன் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இந்த கடத்தலில் தொடா்புடைய ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்த அனில்குமாரை (28) கைது செய்தனா்.