குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், ஓட்டுநா்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சந்தப்பேட்டை பஜாரில் நடைபெற்றது.
அரிமா சங்கத் தலைவா் கே. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் எம்.கே. பொன்னம்பலம் வரவேற்றாா். போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ. செல்லப்பாண்டியன் இருசக்கர வாகன ஓட்டிகள், ஓட்டுநா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள், கிருமிநாசினி, முகக்கவசங்களை வழங்கினாா்.
அரிமா சங்க நிா்வாகிகள் என். வெங்கடேஸ்வரன், ஏ. சுரேஷ்குமாா், டி. கமல்ஹாசன், எஸ்.ஏ. கலிமுல்லா, உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.