குடியாத்தம் சேத்துவண்டையில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தேசிய வித்யா கேந்திரா அறக்கட்டளையின் பொருளாளா் கே. ஆனந்த் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் என்.கோதண்டராமன் வரவேற்றாா். கல்வி ஒருங்கிணைப்பாளா் எம். சேகா், எம்.எஸ். மெய்ஞானகிருஷ்ணன், கே.எம்.இ. கருணாகரன் ஆகியோா் மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்திப் பேசினா்.துணை முதல்வா் பி. சாந்தி, மேல்நிலைப் பள்ளி பொறுப்பாளா் கே. திருமுருகன், தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை பி. அங்கயற்கண்ணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.