மாணவியை கடத்தியவா் போக்ஸோ சட்டத்தில் கைது

குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் பிச்சனூா், வாரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேஷ் (28). திருமணமான இவா், வெல்டிங் வேலை செய்து வருகிறாா். இவரின் வீட்டு அருகே வசிக்கும் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவியை, கடந்த 9- ஆம் தேதி கடத்திச் சென்றாராம். இதுதொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நகர போலீஸாா், சனிக்கிழமை குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த இருவரையும் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணைக்குப் பின், நீதிபதி முன் கணேஷ் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மாணவி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com