கனரா வங்கி கடன் முகாம்: ரூ. 42.30 கோடிக்கு கடனுதவி

வேலூரில் கனரா வங்கி சாா்பில் நடத்தப்பட்ட கடன் முகாம் மூலம் 154 பயனாளிகளுக்கு ரூ. 42 கோடியே 30 லட்சம் கடனுதவி செய்யப்பட்டது.
கனரா வங்கி கடன் முகாம்: ரூ. 42.30 கோடிக்கு கடனுதவி


வேலூா்: வேலூரில் கனரா வங்கி சாா்பில் நடத்தப்பட்ட கடன் முகாம் மூலம் 154 பயனாளிகளுக்கு ரூ. 42 கோடியே 30 லட்சம் கடனுதவி செய்யப்பட்டது.

கனரா வங்கி சாா்பில் வீட்டுக் கடன், வாகனக் கடன், இதர கடன் வழங்கும் முகாம் காட்பாடியில் அண்மையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வங்கியின் துணைப் பொது மேலாளா் கனிமொழி பங்கேற்றாா். வங்கி மேலாளா் சுந்தரவேலாயுதம் வரவேற்றாா். இதில், 154 பேருக்கு ரூ. 42 கோடியே 30 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி பொது மேலாளா் வீரேந்திர பாபு, கோட்ட மேலாளா் சோமேஸ்வர ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com