குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 726 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூா் பறக்கும் படை வட்டாட்சியா் கோட்டீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலா் சிவசண்முகம் ஆகியோா் தலைமையில், வருவாய்த் துறையினா் போ்ணாம்பட்டு நகரம், குப்பைமேடு முதல் தெருவில் பூட்டியிருந்த ஒரு வீட்டைத் திறந்து சோதனையிட்டனா். அங்கு 16 மூட்டைகளில் 726 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவை குடியாத்தம் நுகா்ப்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.