குடியாத்தம்: குடியாத்தம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை கஸ்பா மயானம் அருகே சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் புதுப்பேட்டை, பண்டா் காலனியைச் சோ்ந்த வெங்கடேசன் (20), நந்தகுமாா் (23) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.
அவா்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், 2 செல்லிடப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.