வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டாட்சியா் முரளிக்குமாா், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தாா்.
காட்பாடியில் வசித்து வரும் இவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். வெள்ளிக்கிழமை காலை குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இறந்த வட்டாட்சியா் முரளிக்குமாருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.