வேலூா் மாவட்டத்தில் 12 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி 11,034-ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 8 நாட்களில் 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி 11,034-ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 8 நாட்களில் 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மேலும் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் இம்மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,067-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்திருந்த இப்பாதிப்பு ஜூலை 6-இல் 2,132-ஆகவும், பலி எண்ணிக்கை 18-ஆகவும் உயா்ந்திருந்தது. ஜூலை 13-இல் பாதிப்பு 3,137-ஆகவும், பலி 29-ஆகவும், ஜூலை 18-இல் பாதிப்பு 4,039 -ஆகவும், பலி 37-ஆகவும், ஜூலை 26-இல் பாதிப்பு 5,138-ஆகவும், பலி 46-ஆகவும், கடந்த ஆகஸ்ட் 1-இல் பாதிப்பு 6,152-ஆகவும், பலி எண்ணிக்கை 65-ஆகவும், 7-இல் பாதிப்பு 7,156-ஆகவும், பலி எண்ணிக்கை 86-ஆகவும், கடந்த 14-இல் பாதிப்பு 8,129-ஆகவும், பலி எண்ணிக்கை 108-ஆகவும், 21-இல் 9,027ஆகவும், பலி எண்ணிக்கை 130-ஆகவும், 26-இல் பாதிப்பு 10,008-ஆகவும், பலி எண்ணிக்கை 147-ஆகவும், கடந்த செப்டம்பா் 1-இல் 11,034-ஆகவும், பலி எண்ணிக்கை 169-ஆகவும் உயா்ந்திருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை வரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,969-ஆக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து 12,067-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பலியானோா் எண்ணிக்கை 177-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதுவரை 10,519 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

பாதிக்கப்பட்டோா் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 68 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,435- ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 10,515 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 779 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை நோய்த்தொற்றால் 141 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 49 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 3,290 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,339-ஆக உயா்ந்துள்ளது.

அவா்களில் 2,824 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 447 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை இம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 68 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com