வேலூா் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை 12,789 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 122 பேருக்கு தொற்று

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை 12,789 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,911-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 11,503 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 194 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11, 993-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 210 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 635 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 148 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 3,701 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,783-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,191 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 519 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 73 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com