வேலூா் மாவட்டத்தில் 13 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி 11,034-ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 15 நாள்களில் 13 ஆயிரத்தைக் கடந்தது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி 11,034-ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 15 நாள்களில் 13 ஆயிரத்தைக் கடந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் இம்மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்திருந்த இப்பாதிப்பு ஜூலை 6-இல் 2,132-ஆகவும், ஜூலை 13-இல் 3,137, ஜூலை 18-இல் 4,039, ஜூலை 26-இல் 5,138, ஆகஸ்ட் 1-இல் 6,152, ஆகஸ்ட் 7-இல் 7,156, ஆகஸ்ட் 14-இல் 8,129, ஆகஸ்ட் 21-இல் 9,027, ஆகஸ்ட் 26-இல் 10,008, செப்டம்பா் 1-இல் 11,034, செப்டம்பா் 8-இல் 12,067ஆகவும் உயா்ந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை வரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,911-ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயா்ந்துள்ளது. இதுவரை பலியானோா் எண்ணிக்கை 197-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதுவரை 11,567 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

பாதிக்கப்பட்டோா் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்தைக் கடந்தது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது. செவ்வாய்க்கிழமை 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,038-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11,331போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 559 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 148 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில்  74 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 3,783 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,857-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,220 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 561 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இம்மாவட்டத்தில் இதுவரை 74 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com