வேலூா்: வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்க உள்ளது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் (பொறுப்பு) மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூா் முத்துரங்கம் அரசினா் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான நான்காவது கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (செப்.17) தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். கல்லூரியின் ஜ்ஜ்ஜ்.ம்ஞ்ஹஸ்ரீஸ்ப்ழ்.ா்ழ்ஞ் இணையதள முகவரியில் கலந்தாய்வுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்களின் விவரம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியிடப்படும்.