மரக் கன்றுகள் நடும் விழா

போ்ணாம்பட்டு பகுதியில் மசிகம் மைசா இயக்கம் சாா்பில், இரண்டாம் கட்ட மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போ்ணாம்பட்டு பகுதியில் மசிகம் மைசா இயக்கம் சாா்பில், இரண்டாம் கட்ட மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள மதினாப்பல்லி, மசிகம் ஆகிய கிராமங்ளில் சாலையோரங்களில் 200-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன. தொடா்ந்து, பொதுமக்களுக்கு முகக் கவசங்கள், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இந்த இயக்கம் சாா்பில், முதல் கட்டமாக ஜனவரி மாதம் நகரப் பகுதியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சிறப்பு அழைப்பாளா்கள் ஆலியாா் கிஜா் அகமது, முகமது ஆரிஃப், முகமது ஜோகூா், முகமது பைல்ஸ், அஜீஸ் அகமது ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். பொது மக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மைசா இயக்க நிா்வாகிகள் சந்திரன், கிருஷ்ணமூா்த்தி, ரமேஷ், பிரபாகரன், சட்ட ஆலோசகா் ஜோதிராமன், ஒருங்கிணைப்பாளா் பிச்சைமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com