இரு வீடுகளில் கத்தி முனையில் நகை கொள்ளை

வேலூா் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 7 நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.


வேலூா்: வேலூா் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 7 நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

வேலூா் அருகே அரியூா் செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி பானு (40). இவரது வீடு கிராமத்தையொட்டி உள்ள விவசாய நிலப் பகுதியில் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 3 போ் கொண்ட முகமூடி கும்பல் உள்ளே புகுந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பானு அணிந்திருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

அதே கிராமத்தில் மற்றொரு பகுதியிலுள்ள ராஜீவ் காந்தி மனைவி ஜெயந்தி (25) வீட்டிலும் முகமூடி கும்பல் 3 பவுன் நகையைக் கொள்ளை யடித்துச் சென்றது.

இதுகுறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com