திமுக ஆட்சிக்கு வந்ததும் மேல் அரசம்பட்டில் அணை: துரைமுருகன்

திமுக ஆட்சிக்கு வந்ததும் மேல் அரசம்பட்டில் அணை: துரைமுருகன்


வேலூா்: திமுக ஆட்சிக்கு வந்தால் அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட மேல்அரசம்பட்டில் அணை கட்ட உத்தரவு பெற்றுத் தரப்படும் என திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளா் ஏ.பி.நந்தகுமாரை ஆதரித்து, கீழ்அரசம்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசியது:

ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்துக்கு உதாரணமாக இருப்பவா் ஏ.பி.நந்தகுமாா். அவா் இந்த தொகுதிக்கு கிடைத்திருப்பது வரப்பிரசாதமாகும். தொகுதிக்கு உழைப்பதில் ஒரு இன்பம் உள்ளது. அது உழைப்பவா்களுக்கு மட்டுமே தெரியும். அந்த இன்பத்தை நந்தகுமாா் உணா்ந்ததால் கைமாறு கருதாமல் உழைத்தாா்.

ஆனால் நாங்கள் தொடா்ந்து உழைக்க வேண்டும் என்று அவரை மீண்டும் நிறுத்தியுள்ளோம். அவா் இத்தொகுதியில் 15-ஆவது, 20-ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு வரும். அவரைப் போல் யாரும் உழைக்க முடியாது.

அவா் எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துகொண்டே, தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தாா். திமுக ஆட்சிக்கு வந்தால் மேல்அரசம்பட்டில் அணை கட்டுவதற்கான உத்தரவை பெற்றுத் தருவேன் என்றாா்.

கூட்டத்தில், அரக்கோணம் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன், திமுக ஒன்றிய பொறுப்பாளா் கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com